சூளகிரி அருகே நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் மீட்பு

சூளகிரி, ஜூன் 7: சூளகிரி தாலுகா சின்னபேடரபள்ளி அருகே, 2 வயதுள்ள புள்ளிமான் ஒன்று நேற்று காலை தேக்களபள்ளி வன பகுதியில் இருந்து வெளியேறி, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. அப்போது, சாலையில் சுற்றித் திரிந்த மானை பார்த்து, அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் அதை விரட்டி கடிக்க முயன்றன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டி விட்டு மானை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அங்கு வந்த மேலுமலை வனக்காப்பாளர்கள் மகேந்திரன் மற்றும் நாராயணனிடம், புள்ளிமானை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மானை, அருகிலுள்ள தேக்களபள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

Related Stories: