வாகன ஓட்டிகள் அவதி வி.கைகாட்டி அருகே பைக் மீது லாரி மோதி 4 வாலிபர்கள் பலி

அரியலூர், ஜூன் 7: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மீது, லாரி மோதியதில் 4 வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித்குமார்(22), சதீஸ்குமார்(24), விக்கி(23) மற்றும் 3 பேர் நேற்றிரவு 10 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வி.கைகாட்டியிலிருந்து வெளிப்பிரிங்கியத்துக்கு சென்றுள்ளனர். மயிலாண்டக்கோட்டை அருகே சென்றபோது, அவ்வழியே சிமென்ட் ஆலைக்கு சென்ற லாரி, பைக்குகள் மீது மோதியது. இந்த விபத்தில் அஜித்குமார், சதீஸ்குமார், விக்கி ஆகிய மூவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஹேராம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விபத்தால், திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: