காரைக்குடி, ஜூன் 5: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் கொண்டும் வரும் முயற்சியாக மரம் வளர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கி அசத்தி வருகிறது.
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சாதரணமாக அரசு பள்ளிகளை மக்கள் புறக்கணித்து தனியார் பள்ளிகளை நாடி செல்லும் நிலையில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை விட ஒரு படி மேலே சென்று அசத்தி வருகின்றனர். இந்த ஆண்டு அட்மிஷன் இல்லை என கூறும் அளவில் இப்பள்ளியின் செயல்பாடு உள்ளது. தனியார் பள்ளி மோகத்தில் மக்கள் இருக்கும் நிலையில் ஒரு அரசு பள்ளியில் சேர்க்கைக்கு எம்.பி, எம்எல்ஏ, சிபாரிசு கடிதத்துடன் வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.