திருச்சி, ஜூன் 4: திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணியிடத்திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சமையல் பணியில் 2 வருடம் அனுபவம் பெற்று 1.7.2018 அன்று 18 வயதுக்கு மேற்பட்டு 35 வயதுக்குட்பட்டவர் இனச்சுழற்சி பிரிவில் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது.