ஊட்டி, ஜூன் 4: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கோத்தர்வயல் பனியர் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து பனியர் பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குடிசை மாற்று வாரியம் மூலமாக கோத்தர் வயல் பனியர் கிராமத்தில் சுமார் 12 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டாவது கட்டமாக கட்டுமான பணிக்காக வழங்கப்படும் தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது.