ஊத்தங்கரை அருகே கார் மோதி விவசாயி பலி

ஊத்தங்கரை, ஜூன் 4: ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரை சேர்ந்த விவசாயி மகேந்திரன்(45). இவர் கல்லாவியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். மேல்வெள்ளாளப்பட்டி அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார், மகேந்திரன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்,பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: