நாகர்கோவில், மே 30: இரவு நேரத்தில் இருளில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்ற நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலத்தில் புதியதாக போடப்பட்ட இருக்கைகளை யாரோ சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.128.60 கோடி செலவில் நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், ரூ.179.08 கோடி செலவில் மார்த்தாண்டத்திலும் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலம் 2,582 மீட்டர் நீளம் கொண்டது. பார்வதிபுரம் மேம்பாலம் 1,764 மீட்டர் நீளம் உடையது. இந்த பாலங்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலங்களின் மீது உள்ள மின் விளக்குகள் முறையாக எரியாததால் இரவு நேரங்களில் பல இடங்களிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் இந்த பகுதியில் நிற்கின்ற நிலை உள்ளது.