சூளகிரி, மே 30: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சென்னபள்ளியை சேர்ந்தவர் போடியப்பா(70). விவசாயி. இவர் வீட்டில் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை மேய்ச்சலுக்கு திறந்து விடுவதற்காக பட்டிக்கு சென்று பார்த்தபோது, 15க்கும் மேற்பட்ட ஆடுகள் ரத்தகாயத்தோடு, ஆங்காங்கே விழுந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போடியப்பா சூளகிரி போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.