கரூர், மே 30: டெமு ரயிலில் இன்ஜின் பழுது காரணமாக பலமணிநேரம் தாமதமாக செல்வதால் பயணிகள் கடும்அவதிப்படுகின்றனர். கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டுவந்த டெமு ரயில் கடந்த சில மாதங்களாக சேலம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் நடுவில் இன்ஜின்பொருத்தப்பட்டிருக்கும் புஷ்அனட் புல் முறையில் முன்புறமும் பின்புறமும் கேபின் மூலம் டிரைவர்களால் இயக்கப்படும், இம்முறையில் உள்ளவசதி என்னவென்றால் இஞ்சினைமாற்ற வேண்டியதில்லை. எந்த ஊருக்குசென்றாலும் அப்படியே மறுமுனையில்உள்ள கேபினுக்கு வந்து டிரைவர் இயக்குவார். கரூரில் காலை 6.50மணிக்கு புறப்பட்டு 8.45மணிக்கு திருச்சி ஜங்ஷன் சென்று திருச்சியில் இருந்து 9.15க்கு புறப்பட்டு 11மணிக்கு மீண்டும் கரூர் வரும். இங்கிருந்து சேலம் சென்றுவிட்டு திரும்பி கரூருக்கு மாலை 3.20மணிக்கு வந்து திருச்சிபுறப்பட்டுசெல்லும். திருச்சியில் மாலை 6.15புறப்பட்டு 8.10மணிக்குவரவேண்டும். கரூர் வந்ததும் இங்கேயே மறுநாள் காலை 6.50மணிக்கு புறப்படும்வரை பார்க்கிங் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களாக புஷ்அன்ட் புல் முறையிலான இன்ஜின் பழுதடைந்துவிட்டது. பழுதை சரிசெய்யாமல் டீசல் இன்ஜின்பொருத்தப்பட்டு இந்த பாசஞ்சர் ரயிலை இயக்குகின்றனர். இதனால் திருச்சி, சேலம் சென்றதும்மீண்டும் திரும்பி வர இன்ஜினை மாற்றவேண்டியதிருக்கிறது. இதனால் பலமணிநேரம் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. பயணிகள் பெருத்த அவதிப்பட்டு வருகின்றனர்.