திருப்புவனம் மே 30: திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில், ஜெனரேட்டர் பழுதால், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
திருப்புவனத்தில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணியால் மின்தடை என மின்வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் இ.சேவை மையங்கள் ஜெனரேட்டர் வசதியுடன் இயங்கி வந்தன. இந்நிலையில், நகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜெனரேட்டர் கடந்த ஆறுமாதமாக பழுதாகி கிடக்கிறது. இதனை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. பத்திரப்பதிவு அலுவலகங்களில் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொண்டு, அந்த வரிசையில் பத்திரங்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்படுகிறது. நேற்று மின் தடையால் மின்சாரமில்லை.