100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்

இளையான்குடி, மே 9: இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்ஸ் ஏ படிவம் வழங்கி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொடர்ந்து 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இளையான்குடி ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் யூசுப் சுலைமான், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் இன்னாசிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: