மதுரை, மே 30: மதுரையில் டாக்டரிடம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கன்னிகாட்டு வலசை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (29). இவர் பார்த்திபனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனது நண்பர் நூர் என்பவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒத்தக்கடையில் இருவரும் ஒரு கடையில் சாப்பிட்டு விட்டு டூவீலரில் 4 வழிச்சாலை பாண்டிகோயில் அருகே சென்று கொண்டிருந்தனர்.