வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

வால்பாறை, மே 30:  வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் மலைப்பாதை சீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சாலையை அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த பணிகள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் விரைவில் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள்  எதிர்பார்க்கின்றனர். மேலும், சிறு பாலம் பணிகளும் அப்படியே விடப்பட்டுள்ள நிலையில் விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: