திருவண்ணாமலை, மே 30: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்க சன்னதியில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை கைவிட்டதால், கடும் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. நீர்நிலைகள் வற்றிவிட்டன. நீர்நிலைகளில் தண்ணீரில்லாததால் விவசாய சாகுபடியும் பொய்த்துவிட்டன. இதுவரை எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில், மழை வேண்டி கடந்த வாரம் சிறப்பு யாகம், வருண ெஜபம் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் மழை வேண்டி யாகம் நடந்தது.