கூடலூர், மே 29: முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளில் நேற்று முதல் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சிங்காரா, சீகூர், தெங்குமரஹடா ஆகிய நான்கு வனச்சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று காலை முதல் துவங்கியது. இதில் ஒருநாள் கணக்கெடுப்பு பணியில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புலிகள் காப்பக வெளிவட்ட இணை இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் வனச்சரகர்கள் காந்தன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.