கரூர், மே 29: இ சேவை மையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடக்கோரி உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்துள்ளனர். இ சேவை,ஆதார் சேவை யூனியன் (ஐடி.,ஐடிஇஎஸ்) ஊழியர்கள் கூட்டம் கரூர் அரசு ஊழியர்சங்க கட்டடத்தில் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகேசன், அரசு ஊழியர்சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல்பேசினர். கூட்டத்தில், இசேவை மற்றும்ஆதார் சேவை மையங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது, ஊழியர்களிடம் சட்டவிரோதமாக பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்கவேண்டும்.