மேலூர், மே 28: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட புரவி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலூர் அருகில் சாத்தமங்கலத்தில் உள்ளது ஹரிஹர புத்திர அய்யனார் கோயில். சாத்தமங்கலம், மீனாட்சிபுரம், நடுப்பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான இக் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். இத் திருவிழாவில் பக்தர்களின் நேர்த்தி கடனிற்காக புரவிகளை இ.மலம்பட்டியில் உள்ள பொட்டலில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தயார் செய்யப்பட்டது.