திருவில்லிபுத்தூர், மே 25:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்த கிருஷ்ணர் ரத யாத்திரையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
கர்நாடக மாநிலம் மேல்கோட்டையிலுள்ள சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் மன்னார்குடி அலங்கார ஜீயர் சுவாமிகள், அமெரிக்காவை சேர்ந்த யதீந்திரா மகா தேசிக ஜீயர் சுவாமிகள், கோரக்பூர் பராங்குச ஜீயர் சுவாமிகள் ஆகியோர் ஏற்பாட்டின்படி கிருஷ்ண பகவானின் திருஉருவச்சிலை கொண்ட ரதயாத்திரை கடந்த மே மாதம் மேல்கோட்டையில் துவங்கி தமிழகம் முழுவதும் உள்ள வைணவ கோயில்களுக்கு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.