கரூர், மே 25: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய நபரை பிடிக்க கோரி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கரூர் தாந்தோணிமலையில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருபவர் விஜயகுமார்(40). சத்தியமூர்த்தி நகரில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம்இரவு மாடிப்பகுதியில் மர்மநபர்கள் 3பேர் புகுந்து திருடியுள்ளனர். சத்தம்கேட்டுசென்றபோது ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சேர்ந்து 3பேரை பிடிக்கமுயன்றபோது அப்பகுதியில் உள்ள பழைய எஸ்பி அலுவலக கட்டடத்திற்குள்ஓடினர். இதில் இருவர் சிக்கினர். பொதுமக்கள் தர்மஅடிகொடுத்து தாந்தோணிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களது பெயர் வெள்ளியங்கிரி. வெள்ளையன், இதில் வெள்ளையன் காவல் நிலையத்தில் இருந்து ஓடியபோது கிணற்றில் விழுந்துவிட்டான்.