கூடலூர், மே 25: கூடலூர் அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டீஆர்பஜாரில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது இதே பகுதியை சேர்ந்த சந்திரன் கூலித் தொழிலாளி, இவரது மகன் ஆதர்ஷ்(15) வீட்டில் உள்ள கட்டிலில் தனியாக உறங்கிகொண்டு இருந்தான். அப்போது தலையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.