ஊட்டி, மே 25:நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொதுகழிப்பறைகளை கட்டப்பட்டன. அவை தற்போது டெண்டர் விடப்பட்டு தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. டெண்டர் எடுப்பவர்கள் லாப நோக்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவு கட்டணத்தை வசூலிக்கின்றனர். பொது கழிப்பறைகளை கட்டணங்கள் அதிகளவு வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் சாலை பகுதிகள், ஒதுக்குப்புறமான பகுதிகளை நாடி செல்கின்றனர். இதனால் அப்பகுதி மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.