அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்தவர் சுந்தர் (40), ஆட்டோ டிரைவர். கடந்த 21ம் தேதி நள்ளிரவு இவரது வீட்டினுள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தூங்கிக் கொண்டு இருந்த சுந்தரை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அண்ணாநகரை சேர்ந்த ராஜசேகர் என்கிற நாகராஜ் (19) என்பவர் சுந்தரை வெட்டியது தெரிந்தது.