காளையார்கோவில், மே 22: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) 2019-2020 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆசிரிய, ஆசிரியர்கள் பள்ளியின் சிறப்புகளையும் அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக காளையார்கோவில் பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.