ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யகோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

தஞ்சை, மே 22: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்யகோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் தமிழக கவர்னருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் காதர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள் அரசன், மாநகர குழு உறுப்பினர் போஷ்கனி, நகரக்குழு உறுப்பினர் சதீஷ், மாநகர குழு உறுப்பினர் அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ல் கவர்னருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டு கொள்வதாக எழுதப்பட்ட தபால்கள் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories: