திருமங்கலம். மே 22: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மதுரை தெற்குமாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருமங்கலத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில், திருமங்கலம் மகளிர் காவல்நிலையம் எதிரே ஊர்வலம் தொடங்கியது. மாநில மகளிரணி தலைவர் ஜான்சிராணி, முன்னாள் பேரையூர் சேர்மன் குருசாமி முன்னிலை வகித்தனர்.