ராஜிவ்காந்தி நினைவு தின ஊர்வலம்

திருமங்கலம். மே 22: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மதுரை தெற்குமாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருமங்கலத்தில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில், திருமங்கலம் மகளிர் காவல்நிலையம் எதிரே ஊர்வலம் தொடங்கியது. மாநில மகளிரணி தலைவர் ஜான்சிராணி, முன்னாள் பேரையூர் சேர்மன் குருசாமி முன்னிலை வகித்தனர்.

மவுன ஊர்வலம் உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு வழியாக பஸ்நிலையத்தில் நிறைவு பெற்றது. அங்கு பயங்கரவாத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். இந்த ஊர்வலத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரிதிவிராஜா, மகேந்திரன், அம்மாபட்டி பாண்டி, திருமங்கலம் நகரதலைவர் தாமோதரன், மாவட்ட செயலாள் விஜயன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: