ஈரோடு, மே 21: தபால் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் பணி வருகின்ற 23ம் தேதி நடக்க உள்ளது. இப்பணியில் 750 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எப்படி எண்ணுவது என்பது குறித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், தபால் ஓட்டுக்களை எப்படி எண்ணுவது என்பது குறித்து பயிற்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.