செங்கல்பட்டு, மே 21; செங்கல்பட்டு அடுத்த மலாளிநத்தம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி. இவரது மகன் இளங்கோவன் (17), செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவருகிறான். கடந்த மே 15ம் தேதி நேபாளம் தலைநகர் காத்மாண்டில் சர்வதேச அளவில் நடந்த கிக்பாக்சிங் போட்டியில் இளங்கோவன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முத்தாய் தற்காப்பு கலை சங்கம், குங்பூ பயர் டிரக்ஷன் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் பாராட்டு விழா நடந்தது. சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் ஜெகன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்ற இளங்கோவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.