திங்கள்சந்தை, மே 19: இரணியல் அருகே இரவு நேர ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இரணியல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராம கணேசன். சம்பவத்தன்று இவர் இரவு ரோந்து பணியில் இருந்தார். காரங்காடு குருசடி பக்கம் வாகன தணிக்கையில் இருந்த போது அந்த வழியாக மினி டெம்போ வந்தது. டெம்போவில் 3 பேர் இருந்தனர். அவர்களை நிறுத்தி எஸ்.ஐ. ராம கணேசன் விசாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் நாகர்கோவிலில் இருந்து வருவதாகவும், மற்றொருவர் குருந்தன்கோடு சென்று வருவதாகவும் கூறினர். இருவரும் மாறி, மாறி பேசினர். 3வது நபர் எதுவும் பேசாமல் போதையில் இருந்தார். சந்தேகம் அடைந்து மூவரிடமும் விசாரித்த போது அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல் நிலையத்துக்கு வருமாறு எஸ்.ஐ. ராம கணேசன் கூறினார்.