ஊட்டி, மே 19 : மலர் கண்காட்சியின் 2வது நாளாக நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தாவரவியல் பூங்கா களைகட்டியது. மலர் கண்காட்சி நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியது. நேற்று முன்தினம் மட்டும் மலர் கண்காட்சியை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல சாலைகளை ஒரு வழிப்பாதைகளாக மாற்றினர். மேலும், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம், கூடை மற்றும் 30 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்களை கண்டு வியந்தனர்.