கேரள மாநிலம் வடகராவை அடுத்த நாதாபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் பலி

பாலக்காடு, மே 19:   கேரள மாநிலம் வடகராவை அடுத்த நாதாபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் (47). கட்டடத் தொழிலாளி. இவர் பாலக்காடு கோழிக்கோடு தேசிய சாலையில் புதுப்பாரியம் பகுதியில் சாலையின் குறுக்கே பாலம் கட்ட கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்கான பணி நடைபெற்றுகொண்டுஇருந்து. அப்போது கம்பிகள் சாய்ந்து சந்திரன் சிக்கித் தவித்தார். இவற்றை பார்த்த சக ஊழியர்கள் சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். பாலக்காடு ஹேமாம்பிகாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த சந்திரனுக்கு, பிந்து என்ற மனைவியும், சந்தனா, ஸ்னேகா இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: