மொடக்குறிச்சி, மே 19: மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பள்ளி கிராமம் கல்யாணிபுரத்தில் 1993ம் ஆண்டு பி.கே. பழனிச்சாமிக்கவுண்டர், ருக்மணி அம்மாள் சாமி நர்சரி பள்ளியை துவங்கினர். தற்போது இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக உயர்ந்துள்ளது. மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.இந்நிலையில் பி.கே.பிசாமி பள்ளி 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.