திண்டுக்கல், மே 17: பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய முழு தகவல்களை அறிய இ.எம்.ஐ.எஸ்., (எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) கொண்டு வரப்பட்டது. அதில் ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களின் விபரங்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றி விபரங்களை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.