ேபரூராட்சி அதிரடி ஒட்டன்சத்திரத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

ஒட்டன்சத்திரம், மே 16: ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் நல்லதம்பி (58). இவர் பழநி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக நல்லதம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் ஓய்வு எடுப்பதாக கூறி ஓட்டலின் மாடிக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் நல்லதம்பி தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: