கரூர், மே 16: கரூர் கலெக்டரும்.மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் 19ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி மே 17ம்தேதி (நாளை) மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ, அந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவோ கூடாது. மேலும், தேர்தல் தொடர்பான தகவல்களை ஒளிப்பதிவிலோ, தொலைக் காட்சியிலோ அல்லது எந்தவித மின்னணு தகவல் தொடர்பு முறையிலோ காட்சிப்படுத்தக்கூடாது. இசை நிகழ்ச்சிகள் அல்லது எந்தவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.