கையில் வாளுடன் அட்டகாசம் செய்த பயங்கர ரவுடிகளை பிடித்த போலீசார்

மதுரை, மே 15:  மதுரை தத்தனேரி கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜவகர்(41). இவர் நண்பரை பார்ப்பதற்காக களத்துப்பொட்டல் பகுதிக்கு சென்றார். அங்கு ஏற்கனவே தெரிந்த ரவுடி இம்ரான்கான் மற்றும் கூட்டாளிகளான விஜயராஜன், பிரவின்குமார், மணிகண்டராஜா ஆகியோர் ஜவகரிடம் குடிக்க பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். கத்தியை காட்டி மிரட்ட, மற்றொருவர், ரூ.800 பணத்தை ஜவகரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் இவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் நால்வரும் வாள் மற்றும் கத்தியை தரையில் உரசி அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தினர்.

அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரு டூவீலர்களில் 4 பேரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐ சோமு தலைமையிலான போலீசார் மற்றும் போலீஸ் கமிஷனரின் அதிவிரைவுப்படை போலீசார், அந்த 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். திறமையாக செயல்பட்டு ரவுடிகளை கைது செய்த போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.

Related Stories: