மணப்பாறை, மே 15: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 11.30 மணியளவில் பஸ் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே தங்கம்மாபட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் ஏறி, அடுத்த ரோட்டுக்கு சென்று அங்கு பள்ளத்தில் இறங்கி ஒரு தென்னை மரத்தில் மோதி நின்றது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் 35 பேர் மற்றும் டிரைவர் என 36 பேர் காயமடைந்தனர். பஸ் அடுத்த ரோட்டுக்கு சென்ற சமயத்தில் அந்த ரோட்டில் ஏதாவது வாகனம் வந்திருந்தால், பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என கூறப்படுகிறது.