திருச்செங்கோடு, மே 15: வித்யா விகாஸ் இண்டர்நேஷனல்(சிபிஎஸ்இ) பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் கவின்நிலவன் 500க்கு 481 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவர் செல்வகுமார் 479 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மிருதுளா மற்றும் நிசூலா ஆகியோர் 478 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், இப்பள்ளியில் 450க்கு மேல் 25 மாணவர்களும், 400க்கு மேல் 75 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வித்யா விகாஸ் இண்டர்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளி பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.