திருக்கோவிலூர் அருகே செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

திருக்கோவிலூர், மே 10: திருக்கோவிலூர் அருகே செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நெடுங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தபிரான்சிஸ் மகன் அகிலன் (26). இவர் சம்பவத்தன்று இரவு அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் உறவினருக்கு அவசர தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி செல்போனை கேட்டுள்ளனர். அவர்களை நம்பி அகிலன் தான் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் மதிப்பிலான செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிய சில விநாடிகளில் 2 வாலிபர்களும் மோட்டார் பைக்கில் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அகிலன் அந்த வழியாக ரோந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பு 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அகிலன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், செல்போன் பறித்த நபர்கள் கரடி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் அருண்குமார் (20), துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஜெயவேல்முருகன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: