திருவில்லிபுத்தூர், மே 10: திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கொடிப்பட்டம் கோயிலை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.