புழல்: புழல் ஜிஎன்டி சாலையில் அம்பேத்கர் சிலை அருகே, சம்பத் ராம் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடை உள்ளது. இவர், கடந்த 7ம் தேதி கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான ராஜஸ்தான் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் இவரது கடையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.