17 வயது சிறுமி கடத்தல்

கிருஷ்ணகிரி, மே 9:  கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள், பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் சிறுமியை அதேபகுதியை சேர்ந்த திருப்பதி(25) என்பவர் கடத்தி சென்றதாக தெரிய வந்தது. இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் திருப்பதி மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: