இடைப்பாடி, மே 9: இடைப்பாடி அருகே, அம்மன்காட்டூரில் நான்குவழி சாலைக்கு கூடுதல் நிலம் அளவீடு செய்யபடுவதாக கூறி, அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அருகே அம்மன்காட்டூரில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஓமலூர்சங்ககிரி நான்கு வழி சாலைக்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவிடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, சுங்கச்சாவடி அமைக்க அதிகளவில் அளவீடு செய்வதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.