பாபநாசம், மே 9: பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதான் மந்திரி கிஷான் சஞ்சாயி யோஜனா அரசின் திட்டத்தின்கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் தெளிப்புநீர் கருவி, மழைத்தூவான் மற்றும் சொட்டுநீர் பாசனம் பெறலாம். தகுதியான சிறு மற்றும் குறு விவசாயிகள் தாசில்தார் மூலம் சான்று பெற்று முழு மானியத்தில் பயன்பெறலாம். இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் பயன் பெறலாம்.