திருப்பூர்,மே 9: தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற கூட்டம் பி.கே.ஆர்.இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கி கார்ல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரையாற்றினார். தொடர்ந்து எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் பேசுகையில்: இன்று டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக உள்ளது. இளைய தலைமுறையினர் செல்போன், தொலைக்காட்சி கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். சமூக பொறுப்புணர்வுகளைத் தரும் அநீதியோடு சமரசம் செய்யாத எழுச்சிமிகு உணர்வுகளைத் தரும் நல்ல இலக்கியம் உருவாக்கப்படுவதும், அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது.