காங்கயம்,மே9: காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் சௌடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலு வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திங்கள்கிழமை மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், பால் குட ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய குளக்கரையில் இருந்து பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.