மஞ்சூர், மே 9: மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் மஞ்சூரில் முப்பெரும் விழா நடந்தது. நீலகிரி மாவட்ட மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் 14ம் ஆண்டு விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தாயகம் திரும்பியோருக்கு ரெப்கோ வங்கி மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா மஞ்சூர் எச்.கே.டிரஸ்ட் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவிற்கு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கினார். சேரனுார் ஊர்தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.