கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பெண்ணிடம் 13 சவரன் கொள்ளை

சென்னை, மே 9: கோயம் பேடு  பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்சில் இருந்து இறங்கிய பெண்ணிடம் இருந்து 13 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த திவ்யா (25).  திருமணமாகி சேலத்தில் வசித்து வந்தார். திவ்யா  சேலத்தில் இருந்து தனது  அம்மா வீட்டுக்கு சென்னைக்கு தனியார் ஆமினி பேருந்தில் நேற்று வந்தார்.  கோயம்பேடு பேருந்திலிருந்து கிழே இறங்கி வந்து தனது பையை திறந்து  பார்த்தபோது அவர் கொண்டுவந்திருந்த 13 சவரன் தங்க நகைகளை மாயமாகியிருந்தது  தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறனர்.

Related Stories: