காஞ்சிபுரம், மே 9: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 3 முதல் 8ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.