சேத்துப்பட்டு, மே, 9: சேத்துப்பட்டு- போளூர் சாலையில் தூய லூர்து அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தின் 124வது ஆண்டு பெருவிழா கடந்த 30ம் தேதி ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் நற்கருணை ஆராதனை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை சிறப்பு கூட்டு திருப்பலி ஆயர்கள் ஸ்டீபன், சின்னப்பா ஆகியோர் வழங்கினர். பின்னர், நேற்று மாலை ஜெபமாலை, திருப்பலி, மற்றும் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து, வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜன் மலர்களாலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நற்கருணையுடன் ஆசி வழங்கி போப் ஆண்டவர் தெரு, அரசமர தெரு, பாத்திமா தெரு வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார்.