அவிநாசி,மே7:இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில், மழை வேண்டி, வருணயாகம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, அவிநாசியில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில், நேற்று வருணஜெபம், வருணயாகம் நடைபெற்றது. அவிநாசிலிங்கேசுவரர் கோயில் மண்டபத்தில், உற்சவ தெய்வங்களான உற்சவரான, கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரருக்கு முன்பு, கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. சிவாச்சார்யார்கள், குருக்கள் வருணஜெபம், வேத மந்திர பாராயணம் மற்றும் வருணகாயத்ரி மந்திர பாராயணம் செய்தனர்.